நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் படையில் பணிபுரியும் வீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.
கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில்( அறை எண் 20), மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள், படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி, இரண்டு பிரதிகளாக, குறைகேட்பு கூட்டம் துவங்குவதற்கு முன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.