sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பட்டம்' இதழ் படித்தால் பார் போற்றும் அறிவாற்றல்

/

'பட்டம்' இதழ் படித்தால் பார் போற்றும் அறிவாற்றல்

'பட்டம்' இதழ் படித்தால் பார் போற்றும் அறிவாற்றல்

'பட்டம்' இதழ் படித்தால் பார் போற்றும் அறிவாற்றல்


ADDED : டிச 07, 2024 06:56 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் நடத்திய வினாடி-வினா போட்டி யில், சின்னாண்டிபாளையம், பிளாட்டோஸ் அகாடமி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்தினர்.

கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது. இதில், அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறன் உள்ளிட்ட அறிவாற்றலை வளர்க்கும் பல்வேறு தகவல்கள் இடம் பெறுகின்றன.

இந்தாண்டு 'வினாடி - வினா' போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியன சார்பில் நடைபெற்று வருகிறது. இவற்றுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கைகோர்த்துள்ளது.

சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதி போட்டி நடைபெறும்.

இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்பட இருக்கிறது. இறுதி போட்டியில்வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

திருப்பூர், இடுவம்பாளையம், சின்னாண்டிபாளையம், பிளாட்டோஸ் அகாடமி மேல்நிலைப்பள்ளியில், வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதி சுற்று போட்டியில், 164 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடந்தது.

சரிசம பலத்துடன் தங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தினர்.மூன்று சுற்றுகளாகநடந்த போட்டியில், 'சி' அணியில் இடம் பெற்ற, 8ம் வகுப்பு மாணவர் அகிலன், மாணவி நவ்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி, துணை முதல்வர் ஆபிலா ெஷரின், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா, வினாடி வினா ஒருங்கிணைப்பாளர்கள் ஜீவா, பூரணி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us