sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1.91 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் திறப்பு

/

ரூ.1.91 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் திறப்பு

ரூ.1.91 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் திறப்பு

ரூ.1.91 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் திறப்பு


ADDED : ஆக 13, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலையில், 1.91 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவு சார் மையம் திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, அவர்கள் பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு, அறிவு சார் மையம் அமைக்கவும் அரசு திட்டமிட்டது. அதன்படி, உடுமலை நகராட்சி, யு,கே.சி., நகர் நகராட்சி பள்ளி அருகில், தமிழக அரசு சார்பில், 1.91 கோடி ரூபாய் செலவில் அறிவு சார் மையம் கட்டப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான அனைத்து வகையான நுால்கள், பொது அறிவு நுால்கள், இணைய தள வசதியுடன் கூடிய, கம்ப்யூட்டர்கள், ஏ.சி., வசதியுடன் கூடிய படிப்பறைகள் மற்றும் எல்.இ.டி., திரையுடன் கூடிய பயிற்சி அரங்கு மற்றும் குழந்தைகளுக்கான அரங்கு என பல்வேறு வசதிகளுடன் நுாலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அறிவு சார் மையத்தில் நடந்த விழாவில் நகராட்சித்தலைவர் மத்தீன், முன்னாள் நகராட்சித்தலைவர் வேலுசாமி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us