ADDED : ஆக 04, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க.,வுக்குட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதியில் பெயின்டர் நலச்சங்கம் துவக்கவிழா நடந்தது.
தி.மு.க., பெயின்டர்மற்றும் கட்டுமான தொழிலாளர் நலச் சங்கத்தின் பெயர்ப் பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், பகுதி ெசயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வார்டு செயலாளர் குட்டிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.