/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளம் ஏலம் விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு
/
இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளம் ஏலம் விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு
இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளம் ஏலம் விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு
இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளம் ஏலம் விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு
ADDED : பிப் 15, 2025 06:49 AM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், 8ம் தேதி முதல் நேற்று வரை,174 டன் மக்காச்சோளம் இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை நடந்து வரும் நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை இங்கு கொண்டு வந்து, உலர் களங்களில் காய வைத்து விற்பனைக்கு தயார் செய்கின்றனர். தினமும், இ-நாம் திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் ஏலம் நடக்கிறது.
கடந்த, 8 ம் தேதி முதல், நேற்றுமுன்தினம் வரை, 31 விவசாயிகளின், 174.53 டன் மக்காச்சோளம் இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது.
ஏராளமான நிறுவனங்கள், வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு குவிண்டால் மக்காச்சோளம், ரூ. 2,400 முதல், ரூ. 2,430 வரை ஏலம் போனது. இதன் மதிப்பு, 4 லட்சத்து, 19 ஆயிரத்து, 281 ரூபாயாகும்.
விவசாயிகள் அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களங்களில் காய வைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர், செந்தில்குமார், 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.