sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகரில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: காற்றுக்கு தாங்காமல் விழும் அபாயம்

/

நகரில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: காற்றுக்கு தாங்காமல் விழும் அபாயம்

நகரில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: காற்றுக்கு தாங்காமல் விழும் அபாயம்

நகரில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: காற்றுக்கு தாங்காமல் விழும் அபாயம்


ADDED : ஆக 13, 2024 11:51 PM

Google News

ADDED : ஆக 13, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலையில், பிரதான ரோடுகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விதி மீறி பிரமாண்டமாக பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. காற்றுக்கு தாங்காமல், விபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

உடுமலை நகர பகுதிகளில், ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன.

பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என மக்கள் அதிகம் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இவற்றால், மக்கள் பாதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதி மீறி, இவ்வாறு அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், கவன சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பெரும்பாலான பகுதிகளில், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். பல இடங்களில் காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுநர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது.

பிளக்ஸ் பேனர்களால் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டும், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பதும், அதுகுறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததும் பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, நகர பகுதிகளில், விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us