/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடுப்பளவு மழைநீர் தேக்கம்; மக்கள் தத்தளிப்பு
/
இடுப்பளவு மழைநீர் தேக்கம்; மக்கள் தத்தளிப்பு
ADDED : ஆக 25, 2024 11:09 PM

கால்வாய் அடைப்பு
திருப்பூர், 13வது வார்டு, கரைப்புதுார் ஊராட்சி, பாச்சாங்காட்டுப்பாளையத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது.
- குமார், பாச்சாங்காட்டுபாளையம். (படம் உண்டு)
மழைநீர் தேக்கம்
திருப்பூர், 10வது வார்டு, அனுப்பர்பாளையம், காமராஜர் காலனி, மாரியம்மன் கோவில் வீதியில் மழை பெய்யும் போதெல்லாம், இடுப்பளவு தண்ணீர் வழிநெடுகிலும் தேங்குகிறது.
- பிரகாஷ்குமார், காமராஜர் காலனி. (படம் உண்டு)
கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையம், போயர் வீதியில், மழை பெய்யும் போதெல்லாம், வீடுகளுக்கு முன் மழைநீர் தேங்குகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும், மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
- பாலகிருஷ்ணன், அய்யம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், கே.பி.என்., தோட்டம், எஸ்.எஸ்., நகர் விரிவு பகுதியில் மழைபெய்யும் போதெல்லாம், மழைநீர் தேங்கி, வெளியேற வழியில்லாமல் உள்ளது. பாதசாரிகள் அதிலே நடந்து செல்ல வேண்டியுள்ளது.
- கோபாலகிருஷ்ணன், கே.பி.என்., தோட்டம். (படம் உண்டு)
திருப்பூர், கொங்கு நகர் முதல் வீதி, எக்ஸ்டென்ஷனில் மழைநீர் கால்வாயை விட சாலை உயரமாக உள்ளது. எப்போதுமே மழைநீர் தேங்கி நிற்கிறது.
- கீதா, கொங்கு நகர். (படம் உண்டு)
கஞ்சம்பாளையத்தில் இருந்து போயம்பாளையம் செல்லும் ஓடை ரோட்டில் மழைநீர் தேங்கி, சாலை சேறும், சகதியுமாக உள்ளது.
- சுப்பு, கஞ்சம்பாளையம். (படம் உண்டு)
அவிநாசி, உப்பிலிபாளையம், அக்ரி காலனியில் வழிந்தோட வழியில்லாமல் மழைநீர் தேங்கி நிற்கிறது.
- சுரேஷ் பாலாஜி, உப்பிலிபாளையம்
மழைநீருடன் கழிவுநீர்
திருப்பூர், சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர்., நகர் முதல் வீதியில் மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் தேங்குகிறது. தண்ணீர் வெளியேற 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லாமல் தண்ணீர் அப்படியே தேங்குகிறது.
- மோகனசுந்தரம், சாமுண்டிபுரம். (படம் உண்டு)
மின் விபத்து வாய்ப்பு
திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகர் பஸ் ஸ்டாப், மின் மயான ரோட்டில், சாலையோரம் தாழ்வாக சுவிட்ச் பாக்ஸ் உள்ளது. மின் விபத்துக்கு வாய்ப்புள்ளது.
- வெற்றியரசு, திலகர் நகர். (படம் உண்டு)
இருள் சூழ்கிறது
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், டி.கே.டி., மில் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், பாரப்பாளையம், செல்லம் நகரில் மூன்று தெருவிளக்குகள் எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- ராஜா, பாரப்பாளையம். (படம் உண்டு)
தண்ணீர் வீண்
திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜவஹர் நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- வேலுமணி, ஜவஹர்நகர். (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - யூனியன் மில் ரோடு சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன் அடைப்பை சீர்செய்ய வேண்டும்.
- சந்தோஷ்குமார், யூனியன் மில் ரோடு. (படம் உண்டு)
விபத்து அபாயம்
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் வேகத்தடை வேண்டும். வாகனங்கள் வேகமாக, பயணிப்பதால், விபத்து அபாயம் உள்ளது.
- சூர்யா, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
சுகாதாரச் சீர்கேடு
திருப்பூர், 32வது வார்டு, தொட்டிய மண்ணரை, எம்.ஜி.ஆர்., நகர் முதல் வீதியில் குடியிருப்புக்கு மத்தியில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையை அள்ள வேண்டும்.
- ராஜசேகர், தொட்டிய மண்ணரை. (படம் உண்டு)
'அழிந்த' எச்சரிக்கை
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குத்துாஸ்புரம், மாரியம்மன் கோவில் வீதியில், எச்சரிக்கை பலகை ஸ்டிக்கர் முழுதும் அழிந்து விட்டது. ரயில் தண்டவாளம் அருகே இருப்பதால், எச்சரிக்க வேறு பலகை வைக்க வேண்டும்.
- கோவிந்தராஜ், குத்துாஸ்புரம். (படம் உண்டு)