ADDED : ஆக 10, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;வெள்ளகோவில் அடுத்த காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை 61. ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இரு நாள் முன்னர் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.