sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரி வசூலில் முறைகேடு: பி.டி.ஓ., விசாரணை

/

வரி வசூலில் முறைகேடு: பி.டி.ஓ., விசாரணை

வரி வசூலில் முறைகேடு: பி.டி.ஓ., விசாரணை

வரி வசூலில் முறைகேடு: பி.டி.ஓ., விசாரணை


ADDED : மே 06, 2024 11:27 PM

Google News

ADDED : மே 06, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;காங்கயம் ஒன்றியம் பரஞ்சேர்வழி ஊராட்சியில், வரி வசூலில் ரூ.18 ஆயிரம், ஊராட்சி செயலர் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, பி.டி.ஓ., விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சியில் தலைவராக தங்கராஜ் உள்ளார். லீமாரோசிலின், 50 என்பவர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். குடிநீர், சொத்துவரி உட்பட பல்வேறு பணிகளை கவனித்து வந்தார்.

கடந்த மாதம் சிவியார்பாளையம் கந்தசாமி என்பவருக்கு வரி விதித்து, 18,744 ரூபாய் வசூல் செய்தார். ரசீது புத்தகத்தில் உள்ள அசல் ரசீதில் சீல் வைத்து ரசீதும் தந்துள்ளார். ஆனால், கார்பன் வைக்காமல் எழுதி நகல் காப்பியில், 77 ரூபாய்க்கு மட்டும் எழுதி வைத்து கொண்டார். இதனை கணினியில் பதிவேற்றம் செய்தார். இதுகுறித்து அறிந்த கந்தசாமி ஊராட்சி தலைவர் தங்கராஜ், துணை தலைவர் காயத்ரி ஆகியோரிடம் முறையிட்டார். அதன்பின், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் முறைகேடு குறித்து விசாரித்து, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தார். தொடர்ந்து, பரஞ்சேர்வழி ஊராட்சியில் பல்வேறு கணக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us