/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடைபாதை இருக்கா... இல்லையா? ஆக்கிரமிப்பால் சிக்கல்
/
நடைபாதை இருக்கா... இல்லையா? ஆக்கிரமிப்பால் சிக்கல்
நடைபாதை இருக்கா... இல்லையா? ஆக்கிரமிப்பால் சிக்கல்
நடைபாதை இருக்கா... இல்லையா? ஆக்கிரமிப்பால் சிக்கல்
ADDED : மார் 28, 2024 10:50 PM
உடுமலை;தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி வருவதால், ரோட்டில் நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.
உடுமலை நகரின் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கனரக போக்குவரத்து அதிகளவு உள்ளது. பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில், இருபுறங்களிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டன. குறுகிய நாட்களில், ஆக்கிரமிப்பாளர்களால், எல்லைக்கற்கள் மறைக்கப்பட்டது.
பின்னர், சிறப்பு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பாதசாரிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால், நெரிசலான பகுதியில் ரோட்டையொட்டி, பாதசாரிகள் நடந்து செல்வதும், விபத்து அபாயமும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது நடைபாதை இருப்பதே தெரியாத அளவுக்கு, தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
நடைபாதைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையிலான பகுதியில், வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். எனவே, பாதசாரிகள், மீண்டும் நெடுஞ்சாலையை ஒட்டி, நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்னைகளால், பஸ் ஸ்டாண்டிலிருந்து கொல்லம்பட்டரை வரை இரண்டு கி.மீ.,க்கு வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதே போல், பஸ் ஸ்டாண்டின் இருபுறங்களிலும், நடைபாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டதால், பயணியர், ரோட்டை கடக்கவும், நடந்து செல்லவும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பை மீட்டு, அதனை பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, நெடுஞ்சாலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில், நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

