sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திண்ணைப் பிரசாரம் ஜெயராமன் அழைப்பு

/

திண்ணைப் பிரசாரம் ஜெயராமன் அழைப்பு

திண்ணைப் பிரசாரம் ஜெயராமன் அழைப்பு

திண்ணைப் பிரசாரம் ஜெயராமன் அழைப்பு


ADDED : செப் 01, 2024 11:27 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தெற்கு தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டம், 'சேம்பர் ஆப் காமர்ஸ்' அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.

ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுந்தராம்பாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,''கட்சியில் இணைந்துள்ள புதிய உறுப்புனர்களை, வீடு தேடிச்சென்று சந்திக்க வேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இப்போதிருந்தே நாம் தயாராக வேண்டும். தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடையே திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். ஓட்டு வங்கியை வலுவாக்கி, இயக்கத்தை இரும்பு கோட்டையாக மாற்ற, இளைஞர்களை கட்சிக்கு அழைத்துவர வேண்டும்; நிர்வாகிகளாக நியமிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட ஐந்து வார்டுகளில், புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

---

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.






      Dinamalar
      Follow us