/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'காண்டவ வனம்' மரம் நடும் திட்டம்
/
'காண்டவ வனம்' மரம் நடும் திட்டம்
ADDED : டிச 07, 2024 07:00 AM

திருப்பூர்; திருப்பூர் இன்னர் வீல் கிளப், கருணை இல்லம் அறக்கட்டளை மற்றும்ஸ்ரீ ஜீவாதாரம் சேவா டிரஸ்ட் ஆகியன இணைந்து 'காண்டவ வனம்' என்ற திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டத்தை துவக்கின.
பி.என்., ரோடு, மாநகராட்சி பூங்கா வளாகத்தில், இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது. இன்னர் வீல் கிளப் தலைவர் கலாமணி, மாவட்ட தலைவர் ஜகுர்தி அஸ்வின், கருணை இல்லம் தலைவர் மருதநாயகி, ஸ்ரீஜீவாதாரம் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் ஆனந்த் சுப்ரமணியம், காயத்திரி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருணை இல்லத்தில் பராமரிக்கப்படும் சிறுவர்கள், மண்டல குழு தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.