/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதிரவன் மெட்ரிக் பள்ளி மாணவர் மன்றம் தேர்வு
/
கதிரவன் மெட்ரிக் பள்ளி மாணவர் மன்றம் தேர்வு
ADDED : ஜூலை 22, 2024 12:38 AM

திருப்பூர்:திருப்பூர் கே.வி.ஆர்., நகர் கதிரவன் மெட்ரிக் பள்ளி மாணவர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
திருப்பூர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் யாதவ் க்ரிஸ் அசோக், வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக பிளஸ் 1 மாணவர் கிேஷார், துணை தலைவராக ஒன்பதாம் வகுப்பு மாணவி சாதனா, விளையாட்டு குழு தலைவராக, பிளஸ் 1 மாணவர் திருவிக்ரம் மற்றும் ஆகாஷ், அக்னி, ப்ரித்வி, பிரம்மாஸ் குழுக்களின் தலைவர்கள், துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி, செயலாளர் இந்திராணி நாராயணமூர்த்தி, கதிரவன் அறக்கட்டளை உறுப்பினர் நிவேதா, திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், சென்ட்ரல் இன்ஸ்பெக்டர் ஜமுனா பங்கேற்றனர்.
கலை நிகழ்ச்சிகளும், பள்ளி இசைக்குழுவின், இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.