/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டில் திருட்டு நகை திருடிய 'கில்லாடிகள்': போலீசார் அதிர்ச்சி
/
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டில் திருட்டு நகை திருடிய 'கில்லாடிகள்': போலீசார் அதிர்ச்சி
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டில் திருட்டு நகை திருடிய 'கில்லாடிகள்': போலீசார் அதிர்ச்சி
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டில் திருட்டு நகை திருடிய 'கில்லாடிகள்': போலீசார் அதிர்ச்சி
ADDED : செப் 06, 2024 03:27 AM

அவிநாசி:அவிநாசி அருகே ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீட்டின் ஜன்னலை உடைத்து நகையை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
அவிநாசியில், சேலம் - கோவை பைபாஸ், அவிநாசிலிங்கம் பாளையம் வீதியில் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சுப்பிரமணியம், 68. மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த, 3ம் தேதி தனது மாமியார் இறந்ததால் பெருந்துறைக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை வாட்ச்மேன், வீட்டின் பின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றிருந்த சுப்பிரமணியம் உடனே வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டின் பின் ஜன்னலின் ஒரு பகுதியை வெட்டி உடைத்து, உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் படுக்கையறையில் இருந்த பீரோக்கள், அலமாரிகள் ஆகியவற்றையும் உடைத்து அதிலிருந்து, 5 சவரன் தங்க நகையை திருடி சென்றது தெரிந்தது.
அவிநாசி போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த இரண்டு நாட்களாக சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததால் ஜன்னலை உடைத்த சத்தம் வெளியில் கேட்காமல் போனதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உட்பட தனிப்படை போலீசார், நகை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
----
திருட்டு நடந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீடு. உடைக்கப்பட்ட ஜன்னல். அதற்கான பயன்படுத்தப்பட்ட கோடாரி.