sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேக விழா

/

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேக விழா

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேக விழா

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேக விழா


ADDED : செப் 03, 2024 11:50 PM

Google News

ADDED : செப் 03, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி அருகே சேவூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவிலில், 6ம் தேதி கும்பாபிேஷகம் நடப்பதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது.

இக்கோவிலில், திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிேஷக விழா துவங்கியுள்ளது. இதற்காக, கோவிலருகே யாகசாலை அமைக்கப்பட்டு இன்று யாகபூஜைகள் துவங்குகிறது. இன்றும், நாளையும் யாகசாலை பூஜைகள் நடந்து, 6ம் தேதி அதிகாலை நிறைவுகால யாகபூஜை நடக்கிறது.

அதனை தொடர்ந்து, காலை 7:45 - 8:45 மணிக்குள் கோபுர விமானங்கள் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமி தலைமை வகிக்கிறார். சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமி மற்றும் அரண் பணி அறக்கட்டளை தியாகராஜன், சிவாசலம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, 6ம் தேதி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறையினர் மற்றும் சேவூர் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us