ADDED : ஆக 17, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மதுரை, மேலுாரைச் சேர்ந்த வக்கீல் விஜய பாரதி கோர்ட் வளாகத்தில் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
இதில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரை பாதுகாக்கும் விதமாக ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதைக் கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.