sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு

/

அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு

அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு

அல்லாளபுரம் குட்டை அருகே இணைப்பு சாலை அமைப்பு


ADDED : ஜூலை 06, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அல்லாளபுரம் பாலம் அருகே அணுகு சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது.

திருப்பூர் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில் அல்லாளபுரம் உள்ளது. பொங்கலுார் சென்று சேரும் வகையில் அமைந்துள்ள இந்த ரோட்டில், அல்லாளபுரம் குட்டை அமைந்துள்ளது. இதனருகே தரை மட்டப் பாலம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.

மழை நாட்களில் குளத்திலிருந்து நீர் வெளியேறும் போது, இந்த தரை மட்டப் பாலம் நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் அண்மையில் இந்த இடத்தில் உயர் மட்டப்பாலம் கட்டி முடித்து திறக்கப்பட்டது.

பாலம் கட்டுமானப் பணி முடிந்தும் பாலத்தின் இரு பகுதியிலும் தலா 40 மீ., துாரம் உயர்த்தப்பட்ட இடத்தில் தார் ரோடு போடப்படவில்லை. ஜல்லி பரவிக்கிடந்த, ரோடு காரணமாக பெரும் சிரமம் நிலவியது.

இது குறித்து சுட்டிக் காட்டி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக அங்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாகனங்கள் சிரமமின்றிக் கடந்து செல்கின்றன.






      Dinamalar
      Follow us