/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மிலாடிநபி தினத்தில் மதுக்கடைகள் மூடல்
/
மிலாடிநபி தினத்தில் மதுக்கடைகள் மூடல்
ADDED : செப் 15, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், நாளை, (17ம் தேதி), மிலாடிநபி தினத்தில் மதுக்கடைகள், பார் ஆகியவற்றை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில், நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை, (17ம் தேதி), டாஸ்மாக் மதுக்கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் பார், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் செயல்படக்கூடாது.
மீறுவோர் மீது, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.