sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை

/

'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை

'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை

'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை


ADDED : ஏப் 12, 2024 12:26 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;''ஜெயிக்க கூடிய சின்னத்துக்கு ஓட்டளியுங்கள்; மற்றவர்களுக்கு அளித்து ஓட்டை சிதறடிக்க வேண்டாம்,'' என்று, திருப்பூரில் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு சேகரித்தார்.

திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சாமுண்டிபுரம், வளையன்காடு உள்ளிட்ட பகுதியில் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு சேகரித்தார். பொதுமக்கள், கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியரிடம் ஓட்டு சேகரித்து, மத்திய அரசின் திட்டங்கள்; மோடியால் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி வழங்க கூடிய ஹஜ் மானிய சலுகையை, வேறு எந்த அரசும் வழங்கியது கிடையாது. சவுதியில் இருக்க கூடிய நமது சகோதரர்களுக்கும், அந்த நாட்டுக்கும் மோடி குறித்து தெரியும். அந்நாட்டு மன்னருக்கு மிகவும் பிடித்த தலைவர், மோடி. எல்லோருடன் சேர்ந்தும், எல்லோருக்குமான வளர்ச்சி தான், பா.ஜ., வின் தாரக மந்திரம். வெற்றி பெறக்கூடிய கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. ஜெயிக்க கூடிய சின்னமான தாமரைக்கு ஓட்டுகளை அளித்து, 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு, இந்த வரவேற்பு ஒன்றே சாட்சி. மற்றவர்களுக்கு அளித்து ஓட்டுகளை சிதறடிக்க வேண்டாம். பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us