sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றி வனத்தில் மரங்களை வெட்டியவர் கைது

/

அனுமதியின்றி வனத்தில் மரங்களை வெட்டியவர் கைது

அனுமதியின்றி வனத்தில் மரங்களை வெட்டியவர் கைது

அனுமதியின்றி வனத்தில் மரங்களை வெட்டியவர் கைது


ADDED : ஏப் 25, 2024 11:33 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;அனுமதி இல்லாமல், வனத்தில் மரங்களை வெட்டியதாகவும், பாறைகளை உடைத்து விலங்குகளை அச்சுறுத்தியதாக மலைவாழ் கிராமத்தைச்சேர்ந்த நபரை உடுமலை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது குருமலை மலைவாழ் கிராமம். இக்கிராமத்துக்குச்செல்லும் வழியில், மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஒரு நபரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து, வனத்துறையினர் கூறியதாவது:

குருமலை செல்லும் வழித்தடத்தில், எவ்வித அனுமதியும் இல்லாமல், மரங்களை வெட்டியும், பெரிய அளவிலான பாறைகளை உடைத்தும், வனவிலங்குகளை அச்சுறுத்தியதால், வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில், திருமூர்த்திமலை சாம்பல்மேடு பகுதியைச்சேர்ந்த நாகராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அதே பகுதியைச்சேர்ந்த மூர்த்தி என்ற நபரை தேடி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us