sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காங்கயத்தில் அரசு மருத்துவமனை கிடைக்கப்போகும் மருத்துவ வசதிகள்

/

காங்கயத்தில் அரசு மருத்துவமனை கிடைக்கப்போகும் மருத்துவ வசதிகள்

காங்கயத்தில் அரசு மருத்துவமனை கிடைக்கப்போகும் மருத்துவ வசதிகள்

காங்கயத்தில் அரசு மருத்துவமனை கிடைக்கப்போகும் மருத்துவ வசதிகள்


ADDED : ஜூலை 01, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயத்தில் தலைமை அரசு மருத்துவமனை அமையும் போது, புறநகரில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் முழுமையாக கிடைக்கும்.

திருப்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. திருப்பூருக்கு மாற்றாக காங்கயம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

வெள்ளகோவில், மூலனுார், முத்துார், பாப்பினி, காங்கயம் உள்ளிட்ட வட்டாரங்களில் போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில், அவசர சிகிச்சைக்கு, கோவைக்கு அல்லது திருப்பூருக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை களைய, காங்கயம் அரசு மருத்துவமனையானது தாலுகா பகுதி மக்களுக்கு பெரும்பயனாக மாறியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில், 18 கோடி செலவில், 50 படுக்கைகளுடன் புதிய விரிவுபடுத்தப்பட்ட கட்டடம், நான்கு தளங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ வசதி, இனி, காங்கயத்திலேயே நோயாளிகளுக்கு கிடைக்கும்.

தாராபுரத்திலும்...


காங்கயம் அல்லது தாராபுரத்தில் அரசு மருத்துவமனை அமையும் என்ற விவாதம் நிலவிய போது, நோயாளிகள் வருகை அடிப்படையில் காங்கயத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

இருப்பினும், மருத்துவ வசதிகளை மேம்படுத்த, தாராபுரம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 400 படுக்கைகள் கூடியபுதிய வார்டு தயாராகும் பணியும் நடந்து வருகிறது.

மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, உடுமலையில் அரசு மருத்துவமனைகளும், மடத்துக்குளம், ஊத்துக்குளியில் விரிவுபடுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சாவடிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளுக்கு, 48 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம், நம்பியாம்பாளையத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதாரநிலையம், தாயம்பாளையத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு, நடப்பாண்டில் ஒரு கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில், 18 கோடி செலவில், 50 படுக்கைகளுடன் புதிய விரிவுபடுத்தப்பட்ட கட்டடம், நான்கு தளங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ வசதி, இனி, காங்கயத்திலேயே நோயாளிகளுக்கு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us