/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்தரக்கல்வி கற்க மெரிட் பள்ளியின் 'மெரிட்'
/
உயர்தரக்கல்வி கற்க மெரிட் பள்ளியின் 'மெரிட்'
ADDED : மே 09, 2024 04:43 AM
திருப்பூர் : 'திருப்பூர், கொடுவாயில் உள்ள மெரிட் பள்ளி, உத்தரவாதம் நிறைந்த உயர்தர கல்வியை வழங்குகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவில், எங்கள் பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 578, 568 மற்றும், 556 மதிப்பெண், பள்ளி அளவில் முதல் மூன்றிடங்களாக மாணவர்கள் பெற்றனர். இதில், கணக்கு, இயற்பியல், அக்கவுண்டன்சி, பொருளாதாரம் பாடத்தில், தலா ஒருவர்; வணிகவியல் பாடத்தில் இருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.
தமிழில் இருவர், கம்ப்யூட்டர் அறிவியல், கணிதம், வணிவியல் பாடத்தில் தலா இருவர், 100க்கு 99 மதிப்பெண் பெற்றனர். தமிழில், 4 பேர், அக்கவுண்டன்சியில், 5 பேர், இயற்பியல், கம்ப்யூட்டர் அறிவியல், பொருளியல் பாடத்தில் தலா, ஒருவர் என 3 பேர், 100க்கு 98 மதிப்பெண் பெற்றனர்.
சிறந்த ஆசிரியர்கள் வாயிலாக உத்தரவாதமான உயர்தரக்கல்வி போதிக்கப்படுகிறது. இ-டாக் பாட திட்டம், 'நீட்' பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். எல்.கே.ஜி., முதல், பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.