/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கவுன்சிலரை காணவில்லை'; பேனர் வைத்தது யார்?
/
'கவுன்சிலரை காணவில்லை'; பேனர் வைத்தது யார்?
ADDED : ஆக 22, 2024 12:37 AM

திருப்பூர்: திருப்பூரில், 45வது வார்டு கவுன்சிலரை காணவில்லை என வைக்கப்பட்டிருந்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, 45வது வார்டு கவுன்சிலராக பாத்திமா தஸ்ரின் உள்ளார். இவரது தந்தை முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார்.
வார்டுக்கு உட்பட்ட கோம்பை தோட்டம், ஜம்ஜம்நகர் உள்ளிட்ட பகுதிகளில், வார்டு கவுன்சிலரை காணவில்லை என பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், '45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய கவுன்சிலர் சிங்கப்பெண்ணே எங்கே? மக்களின் பணியை மக்களே செய்வதற்கு எதற்கு கவுன்சிலர்? ஐ.டி.,யில் வேலை செய்யும் உங்களுக்கு எதற்கு கவுன்சிலர் பதவி?' என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின் தந்தை முஸ்தபா கூறியதாவது:
பாத்திமா தஸ்ரின் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதனால், வெளியே வருவதில்லை. வார்டுக்குள் அனைத்து பணிகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் செய்து வருகின்றனர். மக்கள் தரப்பில் எவ்வித அதிருப்தியும் இல்லை.
திட்டமிட்டு பொய்யாக பேனரை வைத்து பெயரை கெடுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மகளுக்கு பதிலாக, வார்டுக்குள் அனைத்து பகுதிகளையும் சென்று பார்வையிட்டு, மக்கள் குறைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு கண்டுவருகிறேன்
இவ்வாறு, அவர் கூறினார்.