/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கணக்கீட்டு பணிக்கு மொபைல்போன் உபகரணங்கள் அவசியம்: சேர்மனுக்கு கடிதம்
/
மின் கணக்கீட்டு பணிக்கு மொபைல்போன் உபகரணங்கள் அவசியம்: சேர்மனுக்கு கடிதம்
மின் கணக்கீட்டு பணிக்கு மொபைல்போன் உபகரணங்கள் அவசியம்: சேர்மனுக்கு கடிதம்
மின் கணக்கீட்டு பணிக்கு மொபைல்போன் உபகரணங்கள் அவசியம்: சேர்மனுக்கு கடிதம்
ADDED : ஜூலை 26, 2024 10:53 PM
திருப்பூர்:செயலி வாயிலாக மின் கணக்கீடு செய்ய, மொபைல் போன் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என, பாரதிய மின் தொழிலாளர் சங்கத்தினர், 'டான்ஜெட்கோ' சேர்மனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், மாதம் இருமுறை கணக்கீடு நடத்தி, மின் நுகர்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்காக, கையடக்க மின் கணக்கீட்ட கருவி வழங்கப்பட்டிருந்தது. வருவாய் இழப்பை தடுக்கும் வகையில், துல்லியமாக மின் கணக்கீடு நடத்த திட்டமிடப்பட்டது.
அவ்வகையில், மின் கணக்கீட்டாளருக்கு, 'ப்ளூடூத் டிவைஸ்' வழங்கப்பட்டது. அதனை, மின் மீட்டர் மீது வைத்தால், மொபைல் ஆப் வாயிலாக மின் கணக்கீட்டை ஆன்லைன் முறையில் மேற்கொண்டு, கட்டணம் கணக்கிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மின் கணக்கீடு செய்யும் பணியாளர், அந்தந்த வீடு அல்லது தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, கணக்கிட வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுசெயலர் சரணவக்குமார், 'டான்ஜெட்கோ' சேர்மனுக்கு அனுப்பிய கடித விவரம்:
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மின் பிரிவு அலுவலகத்திலும், தலா ஒரு பணியாளர், மொபைல் போன் செயலி வாயிலாக மின் கணக்கீடு செய்ய வேண்டும் என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் அல்லது 'டேப்', 'அடாப்டர்', சார்ஜர் போன்ற உபகரணங்கள் எதுவும் வழங்கவில்லை.
புளூடூத் டிவைஸ் மட்டும் வழங்கியுள்ளனர். இதனை மட்டும் கொண்டு எப்படி மின் கணக்கீடு நடத்த முடியும்? அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும், தேவையான உபகரணங்களை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு எழுதியுள்ளனர்.