/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் அதிகம் தாராபுரத்தில் குறைவு
/
அவிநாசியில் அதிகம் தாராபுரத்தில் குறைவு
ADDED : மே 24, 2024 12:33 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், சராசரியாக 17.50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச அளவாக, அவிநாசியில், 103 மி.மீ.,க்கு கனமழை பெய்துள்ளது. பல்லடம் தாலுகா அலுவலக சுற்றுப்பகுதிகளில் 57 மி.மீ., மழையும், திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில், 34 மி.மீ., மழை பதிவானது.
திருப்பூர் வடக்கு தாலுகா பகுதியில், 30, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 30 மி.மீ., - அமராவதி அணைப்பகுதி -- 29, குண்டடம் - 27, நல்லதங்காள் ஓடை - 18, உப்பாறு அணை - 11, மடத்துக்குளம் - 8, திருப்பூர் தெற்கு தாலுகா - 7, கலெக்டர் அலுவலக பகுதி - 7, தாராபுரம் தாலுகா - 6, திருமூர்த்தி அணைப்பகுதி - 5, திருமூர்த்தி அணை (ஐ.பி.,) - 4 என, மாவட்டத்தில் மொத்தம், 350 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.