/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நஞ்சராயன் குளத்துக்கு உலகளாவிய முக்கியத்துவம் 'ராம்சர்' அங்கீகாரம் பெற்றது
/
நஞ்சராயன் குளத்துக்கு உலகளாவிய முக்கியத்துவம் 'ராம்சர்' அங்கீகாரம் பெற்றது
நஞ்சராயன் குளத்துக்கு உலகளாவிய முக்கியத்துவம் 'ராம்சர்' அங்கீகாரம் பெற்றது
நஞ்சராயன் குளத்துக்கு உலகளாவிய முக்கியத்துவம் 'ராம்சர்' அங்கீகாரம் பெற்றது
ADDED : ஆக 18, 2024 01:54 AM

திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், உலகளாவிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
உலகளவிய நாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம், கடந்த, 1971ல், ஈரான் நாட்டில் உள்ள, 'ராம்சர்' என்ற நகரில் நிறைவேற்றப்பட்டது. இது, ஈர நிலங்களின் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தமாகும். ஈர நிலம் பாதுகாப்பு சார்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கியத்துவம் இதன் வாயிலாக வழங்கப்படுகிறது.ஈர நிலங்களின் பாதுகாப்பு, அங்கு வாழும் பல்வேறு உயிர்களின் வாழ்விட பாதுகாப்பு, அதன் வாயிலாக பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழலை உறுதிப்படுத்தும் ஒப்பந்தமாகும். அந்த வகையில் ராம்சர் அங்கீகாரம் பெறும் ஈர நிலங்கள், உலகளாவிய முக்கியத்துவம் பெறுகின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஈர நில ஆணையம், 'ராம்சர்' அங்கீகாரத்தை வழங்குகிறது.
திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு முழுக்க நீர் ததும்பி நிற்கும் இக்குளம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து போகும் இடமாகவும், அவற்றின் வாழ்விடமாகவும் இருக்கிறது. 310 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் இதுவரை, 157 வகை பறவைகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, இதை பறவைகள் சரணாலயமாக, கடந்த, 2022ல், தமிழக அரசு அறிவித்தது.
ராம்சர் அங்கீகாரம் பெறும் ஈர நிலங்கள், உலகளாவிய முக்கியத்துவம் பெறுகின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஈர நில ஆணையம், 'ராம்சர்' அங்கீகாரத்தை வழங்குகிறது.