ADDED : மே 03, 2024 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை பெய்ய வேண்டியும் நவசண்டி வேள்வி ஹோமம் நடைபெற்றது.
சிறப்பு ேஹாமத்துக்கு பின், மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் மழை பெய்ய வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பத்ரகாளி அம்மன், சாமுண்டீஸ்வரி, பராசக்தி அம்மன் ஆகிய மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், திரவிய அபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் ஹோம ரக் ஷை, பிரசாதம் வழங்கப்பட்டது. சண்டி வேள்வி ஹோமத்தையொட்டி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.