sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாலிபர் காதை கடித்து துப்பியவருக்கு வலை

/

வாலிபர் காதை கடித்து துப்பியவருக்கு வலை

வாலிபர் காதை கடித்து துப்பியவருக்கு வலை

வாலிபர் காதை கடித்து துப்பியவருக்கு வலை


ADDED : ஜூன் 05, 2024 11:05 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில், மனைவியிடம் பேசிய வாலிபரின் காதை கடித்து துப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் போயம்பாளையம், அவிநாசி நகர், 5வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ், 29; தொழிலாளி. இவரது மனைவியுடன், அதே பகுதியை சேர்ந்த வினோத், 26 என்பவர் சமீபத்தில் பேசினார். இதை பார்த்த சுரேஷ், சில நாள் முன், வாலிபருடன் தகராறு செய்து, அவரை தாக்கினார்.

கடந்த, 2ம் தேதி இரவு மீண்டும் அப்பகுதிக்கு வினோத் வந்தார். உடனே மனைவியுடன் பேச வருவதாக நினைத்து தகராறு செய்ய சென்றார். ஆத்திரமடைந்த வினோத், கட்டை எடுத்து சென்று அவரை தாக்க சென்றார். இருவருக்குமிடையே தகராறு முற்றியதில், ஒருவருக்கொருவர், ரோட்டில் உருண்டு, சண்டை போட்டனர்.

ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த சுரேஷ், வினோத்தின் வலது காதின் மேல் பகுதியை கடித்து துப்பினார். அதில், காதில் மேற்பகுதி சதை மட்டும் பிய்ந்து வந்து விட்டது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாலிபரின் காதை கடித்து துப்பிய கணவர் சுரேஷை அனுப்பர்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us