நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாததால், பெண்கள், மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு நிழற்கூரை இல்லாததால், வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும் என, பல முறை நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், பயணியர் நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.