sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 26, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.கே., நகரில் வசிக்கும் பெண்கள், நேற்று குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் கூறியதாவது:

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. ரோட்டையும் தோண்டிப் போட்டுள்ளனர். ஓட்டு கேட்டு வந்தவர்கள் இப்போது வீதிப்பக்கமே வருவதில்லை. லாரி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர், கழிவுநீர் போல் உள்ளது. லாரி மூலம் குடிநீர் வேண்டாம். மூன்று மாதமாக போராடியே குடிநீரை பெற்று வருகிறோம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும், நாங்கள் வேலைக்கு செல்லாமலும், குடிநீருக்காக இங்கு வந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக, நகராட்சி கமிஷனர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாருமே வராத நிலையில், பெண் ஒருவர் மயக்கமடைந்தார். உடன் இருந்தவர்கள் குடிநீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர். நீண்ட நேரத்துக்குப் பின், நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us