/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு மையம், சாய ஆலைகளுக்கு நோட்டீஸ்
/
சுத்திகரிப்பு மையம், சாய ஆலைகளுக்கு நோட்டீஸ்
ADDED : மே 13, 2024 12:12 AM
திருப்பூர்;எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் ஆறு சாய ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
திருப்பூர், எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை, தனியார் நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. சுத்திகரிப்புக்கான தொகையை வழங்காமல், சுத்திகரிப்பு மைய நிர்வாகம் நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனம், கடந்த 15 நாட்களாக, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பை நிறுத்திவைத்துள்ளது.
சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டது குறித்து, எஸ்.பெரியபாளையம் சுத்திகரிப்பு மைய நிர்வாகம், மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சுத்திகரிப்பு மையம் நிறுத்தப்பட்ட பின்னும், ஒரு சாய ஆலை மட்டும், விதிகளை மீறி இயங்கி, சாயக்கழிவுநீரை கலெக் ஷன் டேங்கில் சேமித்துவைத்துள்ளதாக வீடியோ பரவியது.
இதையடுத்து, கடந்த 8ம் தேதி, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், எஸ்.பெரியபாளையம் சுத்திகரிப்பு மையம் மற்றும் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். விதிமீறல்கள் உறுதியானதையடுத்து, எஸ்.பெரியபாளையம் சுத்திகரிப்பு மையம் மற்றும் சார்ந்துள்ள ஆறு சாய ஆலைகளுக்கும் விளக்கம் கேட்டு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
சுத்திகரிப்பு மையத்தை நிறுத்தியது குறித்து ஏன் தகவல் அளிக்கவில்லை; சுத்திகரிப்பு நிறுத்தப்பட்ட பின்னரும் சாய ஆலைகள் இயங்கியுள்ளனவா என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.