sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகாரிகள் 'அணுகாத' அணுகு சாலை பணி மணியகாரம்பாளையத்தில் மக்கள் தவிப்பு

/

அதிகாரிகள் 'அணுகாத' அணுகு சாலை பணி மணியகாரம்பாளையத்தில் மக்கள் தவிப்பு

அதிகாரிகள் 'அணுகாத' அணுகு சாலை பணி மணியகாரம்பாளையத்தில் மக்கள் தவிப்பு

அதிகாரிகள் 'அணுகாத' அணுகு சாலை பணி மணியகாரம்பாளையத்தில் மக்கள் தவிப்பு


ADDED : ஜூன் 01, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மணியகாரம்பாளையம் உயர் மட்டப்பாலத்தில் அணுகு சாலை முழுமையாக செய்து முடிக்காமல் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.

திருப்பூரில், காங்கயம் ரோட்டையும், ஊத்துக்குளி ரோட்டையும் இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைத்த ரோடு உள்ளது. இதில், நொய்யல் ஆற்றின் மீது மணியகாரம்பாளையம் பகுதியில் உயர் மட்டப் பாலம் உள்ளது. இரு வழிப்பாதையாக அகலமாக இந்த ரோடு உள்ளது.

இந்த பாலம் கட்டுமானத்திலிருந்து ரோட்டை சேரும் வகையில் அணுகு சாலை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இரு வழிப்பாதையாக உள்ள பாலத்தில் வடக்கு பகுதியில் ஒரு புறம் மட்டும் இந்த அணுகு சாலை தார் ரோட்டுடன் இணைக்காமல் குழியாக இருந்து. இதனால், வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அவதி நிலவியது.

இந்நிலையில், ஆண்டுக்கணக்கில் இந்த அணுகு சாலை அமைக்காமல் நிலவியது. கடந்த இரு மாதம் முன்னர் இந்த இடத்தில் மண் கொண்டு வந்து கொட்டி நிரப்பப்பட்டது. இதனால் பாலம் மீது தடுமாறியபடி கடந்து சென்ற வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்தனர்.

ஆனால், மண் கொட்டி நிரப்பியதோடு சரி, அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை.

பாலம் இணைப்பு அணுகு சாலை தார் ரோடாக மாற்றப்படும் என எதிர்பார்த்த வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்பகுதியில் முழுமையாக தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us