sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை

/

சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை

சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை

சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை


ADDED : ஜூன் 15, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;ஊத்துக்குளி சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்லம்மாள், 70. உடல்நலக்குறைவு காரணமாக, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். பக்கத்து வீட்டைச்சேர்ந்த பொன்னம்மாள்,72 என்பவருக்கும், செல்லம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் கொட்டுவதால் வீட்டு சுவர் நனைத்து பாதிப்படைவதாக செல்லம்மாள் சத்தம்போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பொன்னம்மாள், சுடுநீரை கொண்டுவந்து, செல்லம்மாள் மீது கொட்டியுள்ளார். இதில், உடல் வெந்து செல்லம்மாள் இறந்தார்.

ஊத்துக்குளி போலீசார், கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பொன்னம்மாளை கைது செய்து சிறையி லடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு பொன்னம்மாளுக்கு 3 மாதம் சிறைதண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.






      Dinamalar
      Follow us