/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம் விலையை எதிர்பார்த்து இருப்பு
/
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம் விலையை எதிர்பார்த்து இருப்பு
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம் விலையை எதிர்பார்த்து இருப்பு
சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம் விலையை எதிர்பார்த்து இருப்பு
ADDED : ஜூலை 02, 2024 02:20 AM

உடுமலை:உடுமலை பகுதிகளில், சின்ன வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது; விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைக்கத்துவங்கியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக, சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.
நடப்பாண்டு பருவ மழை துவங்கியது மற்றும் கிணற்றுப்பாசன வசதியுள்ள நிலங்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. நேரடியாக காய் விதை நடவு செய்யப்பட்டு, தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது.
அவ்வப்போது, ஒரு சில இடங்களில், மழையும் பெய்து வருவதால், அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யப்படும் புதிய வெங்காயம், கிலோ, 40 முதல், 45 ரூபாய் வரை, வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஒரு சில விவசாயிகள் பட்டறை அமைத்து, இருப்பு வைத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, உழவு, விதை, உரம், அறுவடை என, ஏக்கருக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. நீர்ப்பற்றாக்குறை, மழை பொழிவு காரணமாக, மகசூல் பாதித்துள்ளது. ஒரு கிலோ, வெங்காயம், 40 முதல், 45 ரூபாய் வரை விற்று வருகிறது,' என்றனர்.