ADDED : ஜூன் 29, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஒவ்வொரு வாரமும் போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இந்த வாரம் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 10, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 என மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று மதியம் துவங்கி, நாளை இரவு வரை சிறப்பு பஸ்கள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இயக்கப்படும். 'தேவையிருப்பின் பஸ் இயக்கப்படும்; இல்லாவிடில், நிறுத்தி வைக்கப்படும்,' என, திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.