/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறால் பண்ணைகள் பதிவு செய்ய உத்தரவு
/
இறால் பண்ணைகள் பதிவு செய்ய உத்தரவு
ADDED : ஜூலை 02, 2024 12:21 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் இறால் பண்ணை வைத்திருப்போர், பதிவு செய்து உரிமம் பெற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
கடல்நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே இயங்கும் நன்னீர் வன்னமை இறால் பண்ணைகளை வரன்முறைப்படுத்தி பதிவு செய்யும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பதிவு பெறாமல் இயங்கும் இறால் பண்ணைகள், தாராபுரம், நல்லதங்காள் ஓடை அணை பகுதியில் இயங்கும் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை, 89037 46476 என்கிற எண்ணிலும்; ஈரோடு கலெக்டர் அலுவலக வளாக 7 வது தளத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0424 2221912 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நன்னீர் வன்னமை இறால் வளர்ப்பு பண்ணைகள், பதிவுக்கு விண்ணப்பிக்க தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவிலான குழு மற்றும் தொழில்நுட்ப குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாத பண்ணைகளின் இயக்கம் நிறுத்தப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.