sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு

/

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு

கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 10, 2024 10:24 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, தினமும் ஏராளமானோர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும், இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள், இவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், ரயில்களில் அமர இடமின்றியும், நீண்ட நேரம் நின்று கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஏற்கனவே, மீட்டர் கேஜ் இருந்த போது, கோவை - ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி, பாலக்காடு - கொல்லம் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரயில்பாதையாக்கப்பட்ட பின், அந்த ரயில்கள் இயக்கப்படுவதில்லை.

எனவே, பயணியரின் நலன் கருதி, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, உடுமலை ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்






      Dinamalar
      Follow us