sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகம் சூழ்ந்தன பாதசாரிகள் பரிதவிப்பு

/

அதிகம் சூழ்ந்தன பாதசாரிகள் பரிதவிப்பு

அதிகம் சூழ்ந்தன பாதசாரிகள் பரிதவிப்பு

அதிகம் சூழ்ந்தன பாதசாரிகள் பரிதவிப்பு

1


ADDED : ஜூன் 20, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர் நகரின் முக்கியமான பகுதியான கொங்கு மெயின் ரோடு, நடைபாதை அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், அகலமான ரோடுகள் தேர்வு செய்து, 'ஸ்மார்ட் ரோடாக' அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நகரின் முக்கியமான ரோடுகளில் ஒன்றான கொங்கு மெயின் ரோடு ஸ்மார்ட் ரோடாக அமைக்கப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் ரோட்டில்' இரு புறமும் மழை நீர் வடிகால் அமைப்பு, நடைமேடையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடை மேடை மக்களுக்கு பயனில்லாத நிலை உள்ளது. அதற்குப் பதில், அப்பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் இதனை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர்.

சில கடைக்காரர்கள் தங்கள் விற்பனை பொருட்களை இதன் மீது பரப்பி வைத்துள்ளனர். பல கடைக்காரர்கள் இதன் மீதே நிரந்தரமாக கடைகளையே அமைத்துள்ளனர். பாதசாரிகள் நடைமேடை மீது நடந்து செல்ல வழியில்லாமல் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டிஉள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறுவதும், சிறுசிறு விபத்து ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நடைமேடை வர்த்தக ரீதியில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து உரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us