/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 16, 2024 11:11 PM
உடுமலை;உடுமலை - பழநிக்கு மாற்று வழித்தடத்திலுள்ள குமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம் வழியாகவும், கொழுமம் வழியாக செல்லவும் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் வழித்தடத்தில் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த வழித்தடத்தில் உள்ள குமரலிங்கம், பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, தினமும் பஸ்கள் உடுமலையிலிருந்தும், பழநியிலிருந்தும் இயக்கப்படுகின்றன.
ஆனால், குமரலிங்கத்தில் பஸ் நின்று செல்ல பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவில்லை. அங்குள்ள குறுகிய பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதால், காலை, மாலை நேரங்களில் இட நெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க, குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

