sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 16, 2024 11:11 PM

Google News

ADDED : மே 16, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை - பழநிக்கு மாற்று வழித்தடத்திலுள்ள குமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம் வழியாகவும், கொழுமம் வழியாக செல்லவும் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் வழித்தடத்தில் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த வழித்தடத்தில் உள்ள குமரலிங்கம், பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, தினமும் பஸ்கள் உடுமலையிலிருந்தும், பழநியிலிருந்தும் இயக்கப்படுகின்றன.

ஆனால், குமரலிங்கத்தில் பஸ் நின்று செல்ல பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவில்லை. அங்குள்ள குறுகிய பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதால், காலை, மாலை நேரங்களில் இட நெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க, குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us