sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாழை இலையுடன் மனு கொடுத்த மக்கள்

/

வாழை இலையுடன் மனு கொடுத்த மக்கள்

வாழை இலையுடன் மனு கொடுத்த மக்கள்

வாழை இலையுடன் மனு கொடுத்த மக்கள்


ADDED : மார் 04, 2025 06:46 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில், சூடான இட்டிலி, பரோட்டா, சிக்கன் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பார்சல் செய்வதற்கு பாலிதீன் பேப்பர் பயன்படுத்துகின்றனர்.

கொதிக்க கொதிக்க டீ, காபியையும் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் கவர்களில் கட்டிக்கொடுக்கின்றனர்.

ஒரு பார்சல் சாப்பாட்டுக்கு, சாதத்துக்கு ஒரு கவர், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், பொரியல் என, ஆறு முதல் ஏழு பாலிதீன் கவர்கள் பார்சலுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

இதனால், பயன்படுத்துபவர் உடலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, பயன்படுத்தியபின் துாக்கி எறியப்படும் பாலிதீன் கவர்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன. சாக்கடை கால்வாய், நீர் நிலைகளில் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.

வாழை தண்டு, வாழை பட்டை, வாழை பூ, வாழைப்பழம் என வாழை மரத்தின் அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் கொண்டவை. திருப்பூர் மாவட்டத்தில் பாலிதீன் பயன்படுத்தும் உணவகங்கள் மீது மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து உணவகங்களிலும் பார்சலுக்கு வாழை இலை பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us