sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேஷன் பணியாளர் போராட திட்டம்

/

ரேஷன் பணியாளர் போராட திட்டம்

ரேஷன் பணியாளர் போராட திட்டம்

ரேஷன் பணியாளர் போராட திட்டம்


ADDED : ஜூன் 25, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க நிர்வாக குழு கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில், மாவட்ட தலைவர் கவுதமன் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்கள் வழங்குவதில், ரேஷன் விற்பனையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அனைத்து கார்டுதாரர்களுக்கும், அனைத்து பொருட்களையும் நுாறு சதவீதம் முழுமையாக ஒதுக்கீடு செய்யவேண்டும். இடம்பெயர்ந்தோருக்கு விற்பனை செய்வதை கணக்கிட்டு, பத்து சதவீதம் கூடுதலாக பொருட்கள் வழங்க வேண்டும்.

உணவு பொருட்களை சரியான எடையில், சணல் சாக்குகளில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை, ஆண்டு ஊதிய உயர்வு, நிலை ஊதியம் ஆகியவற்றை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 12ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us