ADDED : ஜூலை 05, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூரில், 12 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அருண்குமார், 21; ஆட்டோ டிரைவர். இவர் 12 வயது மாணவியுடன் பழகியுள்ளார். மாணவி பயணித்த பஸ்ஸில் ஏறிய அருண்குமார், கைகளை பிடித்து பேசியபடி, திடீரென முத்தம் கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து்ளளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார், போக்சோவில் அருண்குமாரை கைது செய்தனர்.