/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வந்த பின் அல்ல... வருமுன் குற்றம் தடுப்போம் போலீஸ் கமிஷனர் சபதம்
/
வந்த பின் அல்ல... வருமுன் குற்றம் தடுப்போம் போலீஸ் கமிஷனர் சபதம்
வந்த பின் அல்ல... வருமுன் குற்றம் தடுப்போம் போலீஸ் கமிஷனர் சபதம்
வந்த பின் அல்ல... வருமுன் குற்றம் தடுப்போம் போலீஸ் கமிஷனர் சபதம்
ADDED : ஆக 06, 2024 06:35 AM

திருப்பூர்: ''குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்'' என்று திருப்பூரின் புதிய போலீஸ் கமிஷனர் லட்சுமி உறுதி கூறினார்.
சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.,யாக இருந்த லட்சுமி, திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று மதியம் பொறுப்பேற்றார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட, குற்றங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் தொடர்பாக தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
'போக்சோ' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் வளர்ச்சி, மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஜனாதிபதிபதக்கம் பெற்றவர்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அந்தஸ்தான பின், 14வது கமிஷனராக லட்சுமி பொறுப்பேற்றுள்ளார். குரூப்-1 தேர்வு மூலம், 1997ல் டி.எஸ்.பி.,யாக திருவண்ணாமலையில் இவர் தனது பணியை துவக்கினார். பின், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏ.டி.எஸ்.பி., மற்றும் எஸ்.பி.,யாக இருந்தார்.
சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர், தி.நகர், மயிலாப்பூர், கோவையில் துணை கமிஷனர், லஞ்ச ஒழிப்பு துறை போன்ற பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கை திறம்பட அமல்படுத்தியதற்காக உத்தமர் காந்தி பதக்கம், 2018ம் ஆண்டில் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதி பதக்கமும் பெற்றார். திருவண்ணாமலையில் சந்தன ஆயில் கடத்தல் தடுத்தது தொடர்பாக பாராட்டு பெற்றுள்ளார்.