sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஜூலை 27, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூலை 27, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுபாட்டிலில் தாக்கிய தொழிலாளி கைது

காங்கயத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு, 45; ஆயில் மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன், அருகில் உள்ள கோவில் வளாகத்தில் நண்பருடன் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வயக்காட்டு புதுாரை சேர்ந்த பிச்சைமுத்து, 58 என்பவர், சாமிகண்ணுவிடம் மது அருந்த பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிச்சைமுத்து மதுபாட்டிலால் சாமிகண்ணுவை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், பிச்சைமுத்துவை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.

டிப்பர் லாரி மோதி முதியவர் பலி

சாமளாபுரம், வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 72. நேற்று முன்தினம் டூவீலரில் அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேன் மோதி முதியவர் பலி

ஊத்துக்குளியை சேர்ந்தவர் ராசன், 76. இவர் டூவீலரில் கொடியம்பாளையம் - செங்கப்பள்ளி ரோட்டில் சென்றார். பூசாரிபாளையத்தில் ரோட்டை கடக்க டூவீலரில் நின்ற போது, அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதியம் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us