/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுகலை பட்டப்படிப்பு நாளை கவுன்சிலிங்
/
முதுகலை பட்டப்படிப்பு நாளை கவுன்சிலிங்
ADDED : ஆக 11, 2024 11:00 PM
திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் முதுகலை பட்டப் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் நாளை (13ம் தேதி) நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:
கல்லுாரியில் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியியல், எம்.காம்., எம்.காம்., சர்வதேச வணிகம், எம்.எஸ்சி., கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், ஆடைவடிவமைப்பு மற்றும் நாகரிகம் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகளில், மொத்தம் 290 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு உச்தேச தரவரிசைப்பட்டியல் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 13ம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இளங்கலை பட்டப்படிப்பு அனைத்து வகுப்பு சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வேண்டும்.