/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் முதுகலைப் படிப்பு
/
அரசு கல்லுாரியில் முதுகலைப் படிப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் உள்ள, 7 அரசு கல்லுாரிகளில், திருப்பூர் சிக்கண்ணா, எல்.ஆர்.ஜி., உடுமலை அரசு கல்லுாரியில் மட்டுமே முதுகலை பட்டப்பிரிவுகள் உள்ளன.
பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம் அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. முதுகலைப் படிப்புக்காக திருப்பூர் அரசு கல்லுாரி அல்லது வேறு ஏதாவது தனியார் கல்லுாரிகளிலோ சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிலர், கல்லுாரி படிப்பை தொடர முடியாத சூழலும் ஏற்படுகிறது. தாலுகா அளவிலான அரசு கல்லுாரிகளிலும், முதுகலை பட்டப்பிரிவுகள் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.