sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜல்லி கிரஷர் ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

/

ஜல்லி கிரஷர் ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

ஜல்லி கிரஷர் ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

ஜல்லி கிரஷர் ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு


ADDED : மே 26, 2024 12:43 AM

Google News

ADDED : மே 26, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் ஜல்லி கிரஷர் ஆலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு முரணாக, அதிக திறனுள்ள இயந்திரங்கள் நிறுவி, பல ஆயிரம் டன் அரைக்கப்பட்டு, ஜல்லி, எம்-சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

உதாரணமாக, ஒரு மாதத்திற்கு, 68,000 டன் மட்டுமே அரைக்க அனுமதி பெற்ற நிறுவனம், ஒரு நாளைக்கு, 68,000 டன் வரை அரைக்கும் வகையில், அதிக உற்பத்தி திறனுள்ள இயந்திரங்களை நிறுவி, முறைகேடாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும், கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டணமும் செலுத்தியுள்ளன.

இது குறித்து, உரிய ஆவணங்கள் அடிப்படையில், அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஆறு நிறுவனங்கள் இயங்க தடை விதித்து, மின் இணைப்புகளை துண்டிக்க அறிவுறுத்தியதால், மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us