sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்  

/

பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்  

பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்  

பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்  


ADDED : பிப் 26, 2025 04:23 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. முன்னதாக நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனம் மீது தம்பதி சமதேராக உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி - காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. உற்சவர் தம்பதி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். இச்சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us