sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்

/

பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்

பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்

பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்


ADDED : மே 16, 2024 11:23 PM

Google News

ADDED : மே 16, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:பிளஸ் 1 தேர்ச்சி சதவீத குறைவால், புதிய கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவாலாக உள்ளது.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடந்தன. இதில், கடந்த 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், 10ம் தேதி பத்தாம் வகுப்புக்கும், கடந்த 14ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

உடுமலை கோட்டத்தில் கடந்தாண்டிலும் நடப்பாண்டிலும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் பள்ளிகள் வேறுபட்டுள்ளது.

அதேபோல், மற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்திலும் அதிகமான முன்னேற்றம் இல்லை. இதனால் பிளஸ் 1 சேர்க்கை துவங்கியும் மாணவர்களுக்கு பள்ளிகளை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இறுதியாக பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் அரசு பள்ளிகளில் ஒன்று மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மற்ற பள்ளிகளின் தேர்ச்சியும் குறைவாக உள்ளது.

இதனால் புதிய கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வை நினைத்து பள்ளி நிர்வாகத்தினர் இப்போதே அதிருப்தியில் உள்ளனர்.

பிளஸ் 1 தேர்வுக்கு வராமல் இருப்பவர்கள், தேர்ச்சி பெறாதவர்களின் மீது கல்வியாண்டு முழுவதும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் திட்டமிடுகின்றனர்.இதற்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

பள்ளிகளில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்கு பெற்றோர் தரப்பிலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வளர் இளம் பருவத்தினர் பல்வேறு சிந்தனைகளால் கற்றலில் கவனம் இல்லாமல் தேர்வில் தோல்வியடைகின்றனர். நடப்பாண்டில் பிளஸ் 1 தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதால், அவர்களை பிளஸ் 2 தேர்வு சிறப்பாக எழுத வைப்பது ஆசிரியர்களுக்கு சவாலான ஒன்றாக உள்ளது.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us