/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் சங்கத்துக்கு விருது வழங்கல்
/
சுற்றுச்சூழல் சங்கத்துக்கு விருது வழங்கல்
ADDED : ஆக 01, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில் நடந்த விழாவில், சுற்றுச்சூழல் சங்கத்துக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது.
உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், புதிய தொழில் துவங்குவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
கல்லுாரியில் நடந்த நிகழ்வில், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள இளம் தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்றனர்.
விழாவின் ஒரு நிகழ்வாக, இயற்கை வள பாதுகாப்பு தினத்தையொட்டி, உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில், சங்க தலைவர் மணி, செயலாளர் நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.